இன்று பக்ரீத் திருநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தியாவில் பக்ரீத் திருநாள் கொண்டாடி வரும் அனைவருக்கும் இந்திய தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து சுட்டரில் கூறியிருப்பது,
அனைவருக்கும் பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள். ஒரு நியாயமான, இணக்கமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்க இந்த நாள் அமையட்டும். இந்நாளில் நம்மிடையே சகோதரத்துவம் வளரட்டும் என அவர் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்து சுட்டரில் கூறியிருப்பது,
தனது பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த நாள் சமூகத்திற்கு அமைதியையும் செழிப்பையும் தரும் என்று நம்புகிறேன் என அவர் கூறினார்.
கங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்து சுட்டரில் கூறியிருப்பது,
அனைத்து மக்களுக்கும் பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள் என கூறியிருந்தார்.