திருவாரூர்: அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோவில் கட்டுமான பூஜை பூஜைக்காக, திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலயக் குளத்திலிருந்து புனித நீர் சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி நாடு முழுவதிலிருந்தும் புனித ஸ்தலங்களிலிருந்து நீர், மண் ஆகியவை எடுத்து வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலயக்குளத்திலிருந்து புனித நீரும், அரசலாற்று மண்ணும் அனுப்பி வைக்கப்பட்டது.