செங்குன்றத்தில் அறக்கட்டளை சார்பில் நலத் திட்ட உதவிகள்

செங்குன்றம் மனோபாலா கல்வி அறக்கட்டளை சார்பாக 4 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நிறுவனர் ஆர்.முனுசாமி தலைமையில் சனிக் கிழமை நடைபெற்றது.
செங்குன்றத்தில் அறக்கட்டளை சார்பில் நலத் திட்ட உதவிகள்
செங்குன்றத்தில் அறக்கட்டளை சார்பில் நலத் திட்ட உதவிகள்

மாதவரம், ஆக.1: செங்குன்றம் மனோபாலா கல்வி அறக்கட்டளை சார்பாக 4 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நிறுவனர் ஆர்.முனுசாமி தலைமையில் சனிக் கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சாய்பாலா முன்னிலை வகித்தார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு அரிசி, முகக் கவசம், பெண்களுக்கு சேலை என 500 க்கும் மேற்பட்டோருக்கு வழங்கினார்.

இதில் புழல் ஒன்றிய அதிமுக செயலாளர் ஆர்.சுப்பிரமணி, பகுதி செயலாளர் வேலாயுதம், செங்குன்றம் நகர செயலாளர் தாராசிங், டி.ரமேஷ், பாடியநல்லூர் ஊராட்சி மன்ற மூன்றாம் தலைவர் ஆர்.பார்த்திபன், கே.ஆர்.வெங்கடேசன், மாணவர் அணி இணை செயலாளர் அப்துல் காதர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com