கரோனாவால் திமுக பிரமுகர் பலி

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக பிரமுகர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
கரோனாவால் திமுக பிரமுகர் பலி
கரோனாவால் திமுக பிரமுகர் பலி

பாபநாசம்: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக பிரமுகர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

பாபநாசம் திருப்பாலைத்துறையைச் சேர்ந்தவர் வி.எம்.ஷேக் தாவூத் (வயது 55). இவர் பாபநாசம் பேரூராட்சி முன்னாள் தலைவராக இருந்தார். மேலும், திமுக தஞ்சாவூர் வடக்கு மாவட்டப் பொருளாளராக இருந்து வந்த இவர் பாபநாசம் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்டார்.

சளி, இருமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், இவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜூலை 29-ம் தேதி சேர்க்கப்பட்ட ஷேக் தாவூத் சனிக்கிழமை காலை உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com