தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை

சுதந்திர போராட்ட வீர‌ர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர். 
தீரன் சின்னமலை திருவுருவ படத்துக்கு  மரியாதை செலுத்திய முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள்.
தீரன் சின்னமலை திருவுருவ படத்துக்கு  மரியாதை செலுத்திய முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள்.


சென்னை: சுதந்திர போராட்ட வீர‌ர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர். 

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையைப் பெருமைப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி நினைவு  தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினமான இன்று, கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள அவரது நினைவு இடத்தில், அவரது சிலைக்கு மாலைகள் அணிவித்து, தமிழக முதல்வர் எடப்பாடி  கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, டி. ஜெயகுமார், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com