சென்னை: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையைப் பெருமைப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினமான இன்று, கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள அவரது நினைவு இடத்தில், அவரது சிலைக்கு மாலைகள் அணிவித்து, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, டி. ஜெயகுமார், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.