தீரன் சின்னமலை உருவ படத்துக்கு திமுக, கொ.ம.தே.க.வினர் மலர் அஞ்சலி

தீரன் சின்னமலையின் 215-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நாமக்கல் உழவர் சந்தை அருகே நடைபெற்றது. 

நாமக்கல்: தீரன் சின்னமலையின் 215-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நாமக்கல் உழவர் சந்தை அருகே நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.மாதேஸ்வரன் தலைமை வகித்தார். நகர செயலாளர் ராணா ஆனந்த் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் கலந்துகொண்டு தீரன் சின்னமலை திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இதனைத்தொடர்ந்து நாமக்கல் அரசு தெற்கு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகளை நட்டார். 

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர வார்டு செயலாளர்கள் பாஸ்கர், புவனேஸ்வரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்எஸ் ஆர் துரை, பொருளாளர் ஆர் எஸ் ஆர் மணி தலைமை நிலைய செயலாளர் ராஜா (எ) செல்வராஜ் நகர துணைத் தலைவர் நடராஜன், வர்த்தகர் அணி செயலாளர் குரு இளங்கோ, மாவட்ட அமைப்பாளர் செந்தில் ராஜா,  பழனிசாமி, சதீஷ், மணி மற்றும்  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com