மத்திய அமைச்சர் பிரசாத் தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடந்த சனிக்கிழமை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அமித்ஷாவிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் தன்னை சுய தனிமைப் படுத்திக் கொண்டதாக மத்திய அமைச்சர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு எந்த அறிகுறியும் இல்லை எனவும் சுய தனிமை என்பது அடிப்படை நெறிமுறை என்பதால் நான் என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன் என கூறினார்.