ஒடிசாவில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

ஒடிசாவின் கஞ்சம் மற்றும் கஜபதி மாவட்டங்களில் இன்று காலை 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
ஒடிசாவில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
ஒடிசாவில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

ஒடிசாவின் கஞ்சம் மற்றும் கஜபதி மாவட்டங்களில் இன்று காலை 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

இது குறித்து வானிலை மைய அதிகாரி புவனேஸ்வர் கூறுகையில்,

இந்த நிலநடுக்கம் கஜபதி மாவட்டத்தில் இன்று காலை 7.10 மணியளவில் ஏற்பட்டது.

கஞ்சம் மாவட்டத்தின் ஆர் உதயகிரி பகுதிக்கு அருகில் உள்ள பரிபேட்டா மற்றும் தந்திகுடா இடங்களிலும் நிலநடுக்கமானது ஏற்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் எந்தவொரு சேதமும் உயிரிழப்பும் ஏற்படவில்லை என கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com