ஆந்திரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 80 பேர் உயிரிழந்தனர்.
நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆந்திரத்திலும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது தொடர்பாக ஆந்திர சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 7,665 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2,35,525-ஆக அதிகரித்துள்ளது. 87,773 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,45,636 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 80 பேர் உயிரிழந்தனர். இதனால் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,116 ஆக அதிகரித்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.