ஹரியாணாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 794 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 6 பேர் உயிரிழந்தனர்.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஹரியாணா மாநிலத்திலும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது தொடர்பாக ஹரியாணா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 794 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 42,429-ஆக அதிகரித்துள்ளது. இன்று (திங்கட் கிழமை) 711 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 35,492-ஆக அதிகரித்துள்ளது.
ஹரியாணாவில் குணமடைவோர் விகிதம் 83.65 சதவிகிதமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 489-ஆக அதிகரித்துள்ளது இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.