தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 707 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 பேர் உயிரிழந்தனர்.
நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தில்லியிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக தில்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 707 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,46,134-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 1,070 பேர் குணமடைந்ததால், இதுவரை மொத்தமாக 1,31,657 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று (திங்கட் கிழமை) மட்டும் 20 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 4,131-ஆக அதிகரித்துள்ளது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.