ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை.10 : மூணாறு நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் குடும்பத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட பேரவை உறுப்பினர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி கடந்த சில நாள்களாக கனமழை பெய்து பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கன மலையின் காரணமாக மூணாறு ராஜமலை உள்ள பெட்டிமுடி என்ற இடத்தில் டாடா கண்ணன்தேவன் தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பின் மீது கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த மண்சரிவில் சிக்கி 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி கிராமம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ராசையா, சரோஜா என்ற மகாலட்சுமி, ஜோஸ்வா, அருண் மகேஸ்வரன், மரியபுஷ்பம் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இதனை அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டபேரவை உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா உயிரிழந்த குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் தெரிவித்து உரிய நிவாரணம் வழங்கப்படும் என அவர்களிடம் உறுதியளித்தார்.