நியூசிலாந்தில் 102 நாள்களுக்கு பின் ஒருவருக்கு கரோனா உறுதி

நியூசிலாந்தில் கடந்த 102 நாள்களாக கரோனா தொற்று பதிவாகாத நிலையில் இன்று புதிதாக ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நியூசிலாந்தில் கடந்த 102 நாள்களாக கரோனா தொற்று பதிவாகாத நிலையில் இன்று புதிதாக ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை இயக்குனர் கூறுகையில், 

நியூசிலாந்தில் கடந்த 102 நாள்களாக கரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த ஜூலை 30-ம் தேதி ஆஸ்திரேலியாவில் இருந்து 20 வயது இளைஞர் வந்தார். 

அவரை தனிமைப்படுத்தி கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் தனிமைப்படுத்தும் முகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறினார். 

நியூசிலாந்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,570 ஆக உள்ளது. தற்போது 22 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com