புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நார்த்தாமலை ஆறுமுகத்திற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நார்த்தாமலை ஆறுமுகத்தை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை அமைச்சர்கள் உள்பட 24 சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்கெனவே கரோனா பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.