சென்னை: சென்னை அயனாவரத்தில் காவலர் ஒருவரை வெட்டியதாக ரவுடி சங்கர் காவல் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.
அயனவாரம் காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான காவலர்கள் கஞ்சா வியாபாரி ரவுடி சங்கரை பிடிக்க முயன்றபோது, காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியதால் ரவுடி சங்கரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார் காவல் ஆய்வாளர் நடராஜன்.
சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சங்கர் உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.