இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு (ஆக.20) சேர்க்கப்பட்டார்.
சென்னையில் வசித்து வரும் நல்லகண்ணுவுக்கு வியாழக்கிழமை இரவு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் இரவு 1 மணியளவில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன.
அவருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற வேறு எந்தப் பிரச்னைகளும் இல்லை. தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் கரோனா தொற்று இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.