ஒடிசாவில் வெள்ளத்தில் சிக்கித்தவித்த கர்ப்பிணிப்பெண் உள்பட 3 பேரை அதிவிரைவுப்படையினர் பத்திரமாக மீட்டனர்.
ஒடிசாவில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருவதால், மாநிலத்தில் பல்வேறு கிராமங்கள் வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ளன. அணைகள் நிரம்பி வழிவதால், ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இதனிடையே தெனக்கல் மாவட்டத்தின் ஜெயப்பூர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கர்ப்பிணிப்பெண் உள்பட 3 பேர் சிக்கிக்கொண்டனர். இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த மாவட்ட நிர்வாகத்தினர், பேரிடர் மீட்பு அதிவிரைவுப்படையினரின் உதவியுடன் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.
இதன் பிறகு கர்ப்பிணிப்பெண் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.