ஒடிசாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வீடுகள் தண்ணீரில் மூழ்கி இடிந்து விழுந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து சிறப்பு நிவாரண ஆணையர் பிரதீப் குமார் கூறிகையில்,
ஒடிசாவில் பார்கர், நுவாபாடா, ஜஜ்பூர், பலேஸ்வர் மற்றும் பத்ராக் ஆகிய இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்ததில் மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர்.
இதற்கு முன் மயூர்பஞ்ச், கியோஞ்சர் மற்றும் சுந்தர்கர் ஆகிய இடங்களில் 7 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. மேலும் பார்கர் மற்றும் மயூர்பஞ்சில் பகுதியில் 2 பேர் காணாமல் போயுள்ளனர்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க மாநில பேரிடர் மேலாண்மை மீட்புப் படை மற்றும் தீயணைப்பு வீரர்களைச் சேர்ந்த 39 குழுக்கள் பணியில் உள்ளனர். மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 5 குழுக்கள் இன்று வந்துள்ளனர் என கூறினார்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் குறித்த தகவல்களை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.