சென்னை: தனியார் சிமெண்ட் ஆலை குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 7 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை, கரூர், கோவை, அரியலூர், கர்நாடகம், மகாராஷ்டிரம், ஹைதராபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட 60 இடங்களில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலை குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை காலை 8 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், கணக்கில் வராத ரூ. 7 கோடி பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.