ஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்த குண்டு வெடிப்பில் 15 பேர் பலியாகினர், மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உள்துறை அமைச்சக விவகார செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன் கூறியதாவது,
“கஸ்னி மாகாணத்தின் கெலன் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 15க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர், மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.