சென்னை-மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த தேஜஸ் ரயில் ஜனவரி 4ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தேஜஸ் ரயிலானது, சென்னையிலிருந்து மதுரைக்கு வியாழக்கிழமை தவிர பிற நாள்களில் காலை 6 மணிக்கு கிளம்பும், அதேபோல் மதுரையிலிருந்து சென்னைக்கு மாலை 3 மணிக்கு கிளம்பும்.
இந்நிலையில், பயணிகள் மத்தியில் இந்த ரயிலுக்கு போதிய வரவேற்பு இல்லாததால் வருகின்ற ஜனவரி 4ஆம் தேதி முதல் தேஜஸ் ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.