சென்னை விமான நிலையத்தில் ரூ.50.54 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபையில் இருந்து விமானப் பயணிகள் மூலம் தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சோதனை நடத்தப்பட்டது.
இதையடுத்து பயணிகளை சோதனை செய்ததில் ரூ.50.54 லட்சம் மதிப்புடைய 980 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையா் தெரிவித்துள்ளனர்.