பூடான் அரசிற்கு 20,000 கரோனா பரிசோதனை கருவிகளை இந்திய அரசு வியாழக்கிழமை அளித்துள்ளது.
திம்புவில் உள்ள இந்திய தூதரகத்தில், பூடான் அரசிற்கு 20,000 ஆர்டி-பிசிஆர் கரோனா பரிசோதனை கருவிகள், இந்திய அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட பெட்டியில், “இந்திய மக்கள் மற்றும் அரசு சார்பாக பூடான் மக்களுக்கு வழங்கப்படும் பரிசு” என குறிப்பிடப்பட்டுள்ளது.