மகாராஷ்டிரத்தில் மேலும் 3,431 பேருக்கு கரோனா
By ANI | Published On : 25th December 2020 09:24 PM | Last Updated : 25th December 2020 09:24 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
மகாராஷ்டிரத்தில் புதிதாக இன்று(வெள்ளிக்கிழமை) 3,431 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 19,13,382 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் மேலும் 3,431 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 71 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 49,129 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 18,06,298 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய தேதியில் இன்னும் 56,823 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பை:
மும்பையில் புதிதாக 596 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,89,800 ஆக உயர்ந்துள்ளது. இதில் 11,056 பேர் நோய்த் தொற்றால் பலியாகியுள்ளனர்.
தாராவி:
கரோனா பாதிப்பு ஏற்பட்ட பிறகு முதல்முறையாக 9 மாதங்களுக்கு பிறகு இன்று யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.