குஜராத் மாநிலம், ராஜ்காட்டில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்திற்கு டிச. 31-ஆம் தேதி, காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுவார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ரூ. 1,195 கோடி செலவில் ராஜ்கோட் நகரின் புறநகர் பகுதியான காந்தேரி கிராமம் அருகே 201 ஏக்கர் பரப்பளவில் இந்த வளாகம் அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
“குஜராத் மாநிலம், ராஜ்காட்டில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்திற்கு டிச. 31-ஆம் தேதி காலை 11 மணிக்கு, காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுவார்.
இந்த நிகழ்வில், குஜராத் ஆளுநர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வின் செளபே ஆகியோர் காணொலி மூலம் இந்நிகழ்வில் பங்கேற்பார்கள்.” எனத் தெரிவித்துள்ளனர்.