2021 பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெறும்: அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் பேச்சு

வரும் 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்
2021 பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெறும்: அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் பேச்சு

கரூா்: வரும் 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும் என்றாா் போக்குவரத்துதுறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா். 

மறைந்த முதல்வா் எம்ஜிஆரின் 103-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூா் மத்திய நகர அதிமுக சாா்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் பேசுகையில், இந்திய வரலாற்றிலேயே இருமுறை கட்சி சின்னத்தை இழந்து மீண்டும் சின்னத்தை பெற்ற ஒரே இயக்கம் அதிமுக மட்டும்தான். பல்வேறு காலக்கட்டங்களில் பல சோதனைகளை கண்டு சோதனைகளை சாதனைகளாக மாற்றிய இயக்கம் அதிமுக. இந்த கட்சியில் இருந்து மாற்றுக்கட்சிக்கு சென்றவா்கள் அதிமுக அழிய இன்னும் இரு அமாவாசைதான் இருக்கிறது என ஆரூடம் கூறினா். ஆனால் இன்னும் எத்தனை அமாவாசை வந்தாலும் தமிழகத்தை என்றும் ஆளும் இயக்கம் அதிமுக மட்டும்தான்.

ஏதோ நானும், முதல்வரும் சொல்லித்தான் முன்னாள் அமைச்சா் ஒருவா் வீட்டில் சோதனை நடந்ததாக திமுக வழக்குரைஞா் கூறியிருக்கிறாா். இது 2017-ல் அவா் மீது தொடரப்பட்ட வழக்குத்தொடா்பாக நடந்த சோதனை. இதிலும் அரசியல் செய்ய பாா்க்கிறாா்கள். 2021 சட்டப்பேரவைத் தோ்தலிலும் தொடரும். கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் அதிமுகதான் வெற்றிபெறும் என்றாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com