காவல் நிலையத்தில் தலைமை காவலரின் இரும்பு பெட்டி திருட்டு: போலீஸார் விசாரணை

சென்னை பூக்கடை போக்குவரத்து காவல்நிலைய ஓய்வறையில் வைத்திருந்த இரும்பு பெட்டியை காணவில்லை என தலைமை
காவல் நிலையத்தில் தலைமை காவலரின் இரும்பு பெட்டி திருட்டு: போலீஸார் விசாரணை


சென்னை: சென்னை பூக்கடை போக்குவரத்து காவல்நிலைய ஓய்வறையில் வைத்திருந்த இரும்பு பெட்டியை காணவில்லை என தலைமை காவலர் பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

பூக்கடை போக்குவரத்து காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் முத்துசாமி, காவல் நிலையத்தில் உள்ள ஓய்வு அறையில் கடந்த 8 மாதமாக வைத்திருந்த இரும்பு பெட்டியை காணவில்லை என்றும் அதனை எடுத்தவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், அவர்களிடம் இருந்து தனது இரும்பு பெட்டியை பெற்று தருமாறு பூக்கடை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  

தலைமை காவலர் புகார் தொடர்பாக பூக்கடை குற்றப்பிரிவு போலீஸார், சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com