திருப்பூரில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் காவல் துறையினர் நடத்திய தடியடியைக் கண்டித்து திருப்பூரில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் காவல்

திருப்பூர்: சென்னையில் காவல் துறையினர் நடத்திய தடியடியைக் கண்டித்து திருப்பூரில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தின் போகு காவல் துறையினர் தடியடி நடத்தியதை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக முற்றுகைப் போராட்டத்துக்கு தமிழ்நாடு தவ்ஹூத் ஜமா அத் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் நூர்தீன் தலைமை வகித்தார்.

இதில், பங்கேற்ற இஸ்லாமியர்கள் கூறுகையில், சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின்போது காவல் துறையினர் தடியடி நடத்திய கண்டிக்கத்தக்கது. இந்தியர்களை மதரீதியாக பிளவு படுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருபவர்கள் மீது தடியடி நடத்தி காவல் துறையினர் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினர்.

இதில், தமிழ்நாடு தவ்ஹத் ஜமாஅத் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட துணைத் தலைவர் யாசர் அராபத் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மங்கலத்தில் தர்னா: அதே போல் மங்கலம் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் சார்பில் மங்கலம் நால்ரோட்டில் நடைபெற்ற தர்னாவுக்கு ஹாஜி முஸ்தபா தலைமை வகித்தார். இதில், 300க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com