சீர்காழி அருகே ஐம்பொன் சிலைகள் திருட்டு

சீர்காழி அருகே ஐம்பொன் சிலைகள் திருட்டு

சீர்காழி அருகே கீழ் பழனி என்றழைக்கப்படும் கொண்டல் குமார சுப்ரமணிய சுவாமி கோவியில் வள்ளி தெய்வானையை

சீர்காழி அருகே கீழ் பழனி என்றழைக்கப்படும் கொண்டல் குமார சுப்ரமணிய சுவாமி கோவியில் வள்ளி தெய்வானையை முருகப்பெருமான் ஆகிய உற்சவ மூர்த்தி ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். 

ஒவ்வொரு சிலையும் சுமார் முப்பத்தைந்து கிலோவுக்கு மேல் எடை கொண்டது.

பழமையான இந்த ஐம்பொன் சிலைகள் விலை மதிப்பில்லாதது என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர் பிரணவ மந்திரத்தை பிரம்மன் மறந்தபோது முருகப்பெருமான் எடுத்துரைத்தார். இதனால் ஏற்பட்ட பிழை நீங்க பிரம்மதேவன் இக்கோயிலில் வழிபட்டதாக கோவில் வரலாறு கூறுகிறது.

5 ஐம்பொன் சிலைகளில் 3 சிலைகளை மட்டும் திருடி சென்றுள்ளதால் 3 மர்ம நபர்கள் வந்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

முருகப் பெருமான் சிலை இரண்டரை அடி உயரமும் , வள்ளி, தெய்வானை சிலைகள் ஓன்றரை அடி உயரமும் கொண்டது.

இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com