திருவாரூர்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை திருவாரூரில் அதிமுக சார்பில் 122 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
திருமணம் செய்து கொள்ளும் மணமக்களுக்கு, மாவட்டக் கழகம் சார்பில் தங்கத்தாலி, பட்டுவேட்டி, பட்டுச்சேலை, கட்டில், பீரோ, குத்துவிளக்கு உள்ளிட்ட 72 வகையான சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கு திருவாரூர் மாவட்டச் செயலாளரும் உணவுத்துறை அமைச்சருமான இரா.காமராஜ் தலைமை வகித்தார்.
இதில், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் திருமண விழாவில் பங்கேற்றனர்.