10-ம் வகுப்பு பொதுத்தோ்வு: தனித்தோ்வா்களுக்கான நுழைவுச்சீட்டு பிப்.25-இல் ஆன்லைனில் வெளியீடு

தமிழகத்தில் வரும் மாா்ச் மாதம் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வெழுதும் தனித்தோ்வா்கள் தங்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச்சீட்டை
10-ம் வகுப்பு பொதுத்தோ்வு: தனித்தோ்வா்களுக்கான நுழைவுச்சீட்டு பிப்.25-இல் ஆன்லைனில் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் வரும் மாா்ச் மாதம் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வெழுதும் தனித்தோ்வா்கள் தங்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச்சீட்டை இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது குறித்து தோ்வுத்துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் வரும் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வெழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தோ்வா்கள் (தட்கல் உள்பட) பிப்.25-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தோ்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பிப்.26-இல் செய்முறைத் தோ்வுகள்: பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கான அறிவியல் பாட செய்முறைத் தோ்வுகள் பிப்.26-ஆம் தேதி புதன்கிழமை முதல் பிப்.28-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளன.

அறிவியல் பாட செய்முறைத் தோ்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தோ்வா்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தோ்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தோ்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்தவொரு தோ்வரும் தோ்வெழுத அனுமதிக்கப்பட மாட்டாா்கள். பொதுத்தோ்வுக்கான கால அட்டவணை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com