கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் முன்னிலையில் சந்தன கட்டைகள் கடத்தல் மன்னன் வீரப்பனின் மகள் வித்தியா சனிக்கிழமை தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 2000 பேர் பாஜகவில் இணையும் விழா கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இதில் சந்தன கட்டைகள் கடத்தல் மன்னன் வீரப்பனின் இரண்டாவது மகள் வித்தியா, தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் பேசியதாவது: பாஜக இருக்கும் வரை தமிழ்நாட்டில் ஸ்டாலின் முதல்வராக முடியாது. ஸ்டாலின் அதிகம் பொய் பேசுகிறார். நமது தேசத்திற்கு எதிராகவும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் காரனுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறார். ஸ்டாலின் அதிர்ஷ்டம் இல்லாதவர். தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என முரளிதர ராவ் கூறினார்.