செங்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 26வது வார்டு வாக்கு எண்ணிக்கை தற்போது நிறுத்தப்பட்டள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இரு கட்டங்களாக நடந்து முடிந்த வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் சர்ச்சைக்குரிய வகையில் வாக்களித்தாக புகார் எழுந்ததால், தேர்தல் அதிகாரியை முற்றுகையிட்டு திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து செங்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 26வது வார்டு வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.