தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பேச்சியம்மாள் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஒன்றியம் மேலத்திருச்செந்தூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் பேச்சியம்மாளுக்கு நேற்று புதன்கிழமை இரவு (ஜன.1) திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பேச்சியம்மாள் மரணம் அந்த கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.