திருப்பூர் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி உறுப்பினர்கள் முன்னிலை நிலவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதில், திருப்பூர், ஊத்துக்குளி, தாராபுரம், உடுமலை ஆகிய 4 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் சொக்கனூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் எஸ்.சி.சகுந்தலா வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் 1,727 வாக்குகளில், பதிவானவை-1,365 வாக்குகள். இதில், சுயேட்சை வேட்பாளர் எஸ்.சி.சகுந்தலா 676 வாக்குகளும், பூமணி 653 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
பட்டம்பாளையம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் சரவணன் 376 வாக்குகள் பெற்ற வெற்றி பெற்றுள்ளார்.