நாகை மாவட்டம், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கைக்காக தபால் வாக்குகள் பிரிக்கும் பணி தொடங்கியது.
ஆயக்காரன் புலம் நடேசனார் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், முதல்கட்டமாக தபால் வாக்குகள் பிரிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
வாக்குகள் எண்ணும் பள்ளி வளாகத்துக்கு வெளியே திரண்டுள்ள வேட்பாளர்கள், முகவர்கள் என பல தரப்பினரும் ஆர்வத்தோடு காணப்படுகின்றனர்.