300-க்கும் அதிகமான பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட முகமது முஸ்தபா கைது

கேரளா மற்றும் தமிழகத்தில் 300-க்கும் அதிகமான பெண்களிடம் செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்டு வந்த, கேரளா மாநிலத்தை சேர்ந்த முகமது முஸ்தபா
300-க்கும் அதிகமான பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட முகமது முஸ்தபா கைது


கேரளா மற்றும் தமிழகத்தில் 300-க்கும் அதிகமான பெண்களிடம் சங்கிலி பறிப்பு குற்றங்களில் ஈடுபட்டு வந்த, கேரளா மாநிலத்தை சேர்ந்த முகமது முஸ்தபா என்பவரை திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கேரளா மற்றும் தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், பழனி, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் அதிகாலையில் நடந்து செல்லும் பெண்களிடம்  300-க்கும் அதிகமான செயின் பறிப்பு குற்றங்கள் செய்துள்ள கேரளா மாநிலத்தை சேர்ந்த முகமது முஸ்தபா என்பவரை திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

திருச்சி மாநகரில் நடந்த 13 சங்கிலி பறிப்பு வழக்குகள் மற்றும் கரூர், திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த சங்கிலி பறிப்பு வழக்குகளில் தொடர்புடைய 110 சவரன் தங்க நகைகளை  முகமது முஸ்தபாவிடம் இருந்து மீட்டுள்ள போலீஸார், அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com