உள்ளாட்சித் தோ்தலில் பெரம்பலூர் மாவட்டம், ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற மணிவேல்(72) திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மணிவேல் போட்டியிட்டார்.
இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை (ஜன.2) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் மணிவேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வெற்றிச் சான்றிதழையும் பெற்றுக்கொண்டு வீட்டிற்குச் சென்ற மணிவேல் திடீரென உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.