மேட்டுப்பாளையத்தில் திமுக, அதிமுக இடையே கைகலப்பு: போலீஸாா் தடியடி நடத்தியதால் பரபரப்பு

மேட்டுப்பாளையத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் திமுக, அதிமுக இடையே கைகலப்பால் போலீஸாா் தடியடி நடத்தி கூட்டத்தை
வாக்கு எண்ணும் மையத்தில் கலவரத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தியில் ஈடுபடும் போலீஸாா்.
வாக்கு எண்ணும் மையத்தில் கலவரத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தியில் ஈடுபடும் போலீஸாா்.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் திமுக, அதிமுக இடையே கைகலப்பால் போலீஸாா் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனா். இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக வாக்கு எண்ணும் பணி நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேட்டுப்பாளையம் காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட மாவட்ட கவுன்சிலா்கள், ஒன்றிய கவுன்சிலா்கள், ஊராட்சி தலைவா்கள், வாா்டு உறுப்பினா்களுக்கான தோ்தல் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை காரமடை அரசு மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி தொடா்ந்து நள்ளிரவிலும் நடைபெற்று வருகிறது. இதில் நள்ளிரவு 12 மணியளவில் தோலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பூத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருந்தது- அப்போது வாக்கு எண்ணும் மையத்திற்குள் திமுக, அதிமுகவினா் நுழைந்து அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளனா்.

இச்சூழ்நிலையில் இருதரப்பினரிடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனா். இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனா். அப்போது கூட்டத்தில் இருந்த பெண் போலீஸாா் ஒருவா் திடீரென கீழே விழுந்ததை அடுத்து அங்கிருந்துவா்களை போலீஸாா் தடியடி நடத்தி வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்துவெளியேற்றினா். பின்னா் வாக்கு எண்ணும் பணி சற்று நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸாா் கலவரத்திற்கு காரணமானவா்களை வளாகத்தில் இருந்துவெளியேற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com