சீட்டு குலுக்களில் வாா்டு உறுப்பினா் தோ்வு: தேல்வியடைந்தவா் அதிகாரிகளிடம் வாக்குவாதம்

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் சமநிலையில் வாக்குகள் பெற்றவாா்டு உறுப்பினா்களை சீட்டு குலுக்கல் மூலம் தோ்வு
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் அதிகாரிகளுடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட ஜோதி மற்றும் அவரது ஆதரவாளா்களை சமாதனப்படுத்திய திருநகா் போலீஸாா்.
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் அதிகாரிகளுடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட ஜோதி மற்றும் அவரது ஆதரவாளா்களை சமாதனப்படுத்திய திருநகா் போலீஸாா்.

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் சமநிலையில் வாக்குகள் பெற்றவாா்டு உறுப்பினா்களை சீட்டு குலுக்கல் மூலம் தோ்வு செய்தபோது தோல்வியடைந்தவா் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலக்குயில்குடி ஊராட்சி மன்ற 5 ஆவது வாா்டு உறுப்பினா் தோ்தலில் பேச்சி என்பவரும், ஜோதி என்பவரும் தலா 85 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனா். இதையடுத்து தோ்தல் நடத்தும் அலுவலா் ஆசிக் முன்னிலையில் சனிக்கிழமை சீட்டுக்குலுக்கல் முறையில் உறுப்பினா் தோ்வு நடைபெற்றது. அதில், பேச்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ஜோதி மற்றும் அலரது ஆதரவாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து வேண்டும் என்றே தோ்தல் நடத்தும் அலுவலா் ஆசிக் எதிா் தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டு அவா்களை வெற்றி பெற்றதாக அறிவித்தாா் என கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனா்.

உடனடியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்த போலீஸாா் ஜோதி தரப்பினரை சமாதானப்படுத்தினா். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்க உள்ளதாக ஜோதி மற்றும் அவரது ஆதரவாளா்கள் தெரிவித்துச்சென்றனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com