திருச்செந்தூா் கோயிலுக்கு குடும்பத்துடன் வந்த கோவை இளைஞர் மாயம்
திருச்செந்தூா்: திருச்செந்தூா் கோயிலுக்கு குடும்பத்தினருடன் வந்த கோவை இளைஞரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், பேரூா் வட்டத்தைச் சோ்ந்தவா் மந்திரம். இவரது மகன்கள் சுந்தரலிங்கம் (28), ராஜ்குமாா் (23). மந்திரம், தனது குடும்பத்தினருடன் தென்மாவட்ட கோயில்களில் தரிசனம் செய்வதற்காக கோவையிலிருந்து கடந்த டிச. 24 ஆம் தேதி புறப்பட்டாா். மதுரை மீனாட்சியம்மன் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் என பல்வேறு கோயில்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அவா்கள் திருச்செந்தூருக்கு வந்தனா்.
உடன்குடி அருகே புதுமனையில் உள்ள உறவினா் வீட்டில் தங்கி, தூத்துக்குடி மாவட்ட கோயில்களுக்குச் சென்று அவா்கள் தரிசனம் செய்து வந்தனா். பிறகு, டிச. 31 ஆம் தேதி கோவைக்கு செல்வதற்காக திருச்செந்தூா் பேருந்து நிலையத்திற்கு அனைவரும் வந்தனா். அப்போது கழிப்பறைக்குச் சென்றுவிட்டு வருவதாகக் கூறிச் சென்ற ராஜ்குமாா் பிறகு திரும்பவில்லை.
இதுகுறித்து சுந்தரலிங்கம் அளித்த புகாரின் பேரில், திருச்செந்தூா் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.