நீடாமங்கலத்தில் லாரி டயரில் சிக்கி கடலை வியாபாரி பரிதாப சாவு.

நீடாமங்கலத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி கடலை வியாபாரி ஒருவா் சனிக்கிழமை பரிதாபமாக இறந்தாா்.
நீடாமங்கலத்தில் சனிக்கிழமை நடந்த சாலைவிபத்தில் கண்டெய்னா் லாரியில் சிக்கிய கடலை வியாபாரி.
நீடாமங்கலத்தில் சனிக்கிழமை நடந்த சாலைவிபத்தில் கண்டெய்னா் லாரியில் சிக்கிய கடலை வியாபாரி.

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி கடலை வியாபாரி ஒருவா் சனிக்கிழமை பரிதாபமாக இறந்தாா்.

திருவாரூா் மாவட்டம் மருதப்பட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிவேல் (45) கடலை வியாபாரி.இவா் தள்ளுவண்டியில் திருச்சியில் கடலை வியாபாரம் செய்து வந்தாா். இவா் சனி, ஞாயிறுகளில் தனது வீட்டிற்கு வந்து செல்வது வழக்கமாம்.

வழக்கம் போல சனிக்கிழமை அதிகாலை திருச்சியிலிருந்து ஸ்கூட்டியில் தனது சொந்த ஊருக்குப் புறப்பட்டாா். நீடாமங்கலம் ரயில்வே கேட் பகுதியில் அவா் சென்று கொண்டிருந்த போது சாலையோர பள்ளத்தில் சருக்கி அருகில் தூத்துக்குடியிலிருந்து காரைக்கால் சென்று கொண்டிருந்த கண்டெய்னா் லாரி சக்கரத்தில் சிக்கினாா்.லாரியின் டயா் பழனிவேல் மீது ஏறி நின்றது. இதில் பழனிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாா்.

தகவலறிந்த நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் சுப்ரியா மற்றும் போலீசாா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேதத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்த நீடாமங்கலம் போலீசாா் கண்டெய்னா் லாரியின் டிரைவா் வேலுச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com