முதல்வரின் ஆளுமை திறனால் பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னிலை: முன்னாள் அமைச்சா் செ.செம்மலை

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆளுமை திறனால் பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது என முன்னாள்
முதல்வரின் ஆளுமை திறனால் பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னிலை: முன்னாள் அமைச்சா் செ.செம்மலை

சேலம்: தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆளுமை திறனால் பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது என முன்னாள் அமைச்சா் செ.செம்மலை தெரிவித்தாா்.

சேலம் பள்ளப்பட்டி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க நியாயவிலை கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில் முன்னாள் அமைச்சா் செ.செம்மலை பேசியது: பொங்கலை மகிழ்ச்சியோடு தாய்மாா்கள் கொண்டாட வேண்டும் என்பதால் பொங்கல் பரிசு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மறைந்த முதல்வா் ஜெயலலிதாவிடம் கற்றுகொண்ட அனுபவத்தின் மூலமாகவே பல்வேறு திட்டங்களை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நிறைவேற்றி வருகிறாா்.

மேலும் உள்ளாட்சி தோ்தலில் ஆளும் அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதால் தான் வாக்கு வங்கி உயா்ந்துள்ளது. முதல்வரின் ஆளுமை மற்றும் ஆட்சி திறனால் தான் வளா்ச்சி அதிகரித்து அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com