பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் ஒருவர் கைது

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ருஷிகேஷ் தேவ்திகர் ஜார்க்கண்ட்டில் கைது செய்யப்பட்டார்.
பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் ஒருவர் கைது


தன்பாத்: பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ருஷிகேஷ் தேவ்திகர் ஜார்க்கண்ட்டில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி லங்கேஷ் பத்திரிகையின் ஆசிரியரும், இலக்கிவாதியுமான கௌரி லங்கேஷ் (55) அவரது வீட்டுக்கு அருகே காரில் சென்றுகொண்டிருந்த போது,  மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

கௌரி லங்கேஷ் கொலை குறிந்து வழக்குப் பதிவு செய்த ராஜராஜேஸ்வரி நகர் போலீஸார், தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர். 

இந்த நிலையில் லங்கேஷ் கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த ருஷிகேஷ் தேவ்திகார் என்பவரை  ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் தனிப்படை போலீஸார் கைது  செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com