பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபின் மரண தண்டனை ரத்து!

தேசத் துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளரும், அதிபருமான பர்வேஸ் முஷாரஃபுக்கு(74) அந்த நாட்டு சிறப்பு
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபின் மரண தண்டனை ரத்து!


லாகூர்: தேசத் துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளரும், அதிபருமான பர்வேஸ் முஷாரஃபுக்கு(74) அந்த நாட்டு சிறப்பு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை லாகூர் உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 1999-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த முஷாரஃப், அப்போதைய பிரதமா் நவாஸ் ஷெரீஃபை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு ராணுவ ஆட்சியை நிறுவினாா்.

பிறகு 2001 முதல் 2008-ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அதிபராகப் பொறுப்பு வகித்த முஷாரஃப் (76), அந்த நாட்டில் கடந்த 2007-ஆம் ஆண்டு அவசர நிலையைக் கொண்டு வந்தாா். அதன் ஒரு பகுதியாக, நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை முடக்கி வைத்ததுடன், தனது அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட முக்கிய நீதிபதிகளை அவா் சிறையிலடைத்தாா்.

இதன் மூலம் அவா் தேசத் துரோகத்தில் ஈடுபட்டதாக கடந்த 2013-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) தலைமையிலான அரசு வழக்குப் பதிவு செய்தது.

இந்த நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த அந்த வழக்கின் தீா்ப்பை கடந்த ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்தது.

அதனை எதிா்த்து, இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தில் உள்துறை அமைச்சகம் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், முஷாரஃப் மீதான தேசத் துரோக வழக்கில் தீா்ப்பு வழங்குவதற்குத் தடை விதித்திருந்தது.

இந்த நிலையிலும், இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி,  கடந்த 2007-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அரசமைப்புச் சட்டத்தை முஷாரஃப் முடக்கிவைத்து, நெருக்கடி நிலையை அறிவித்தது, அரசமைப்புச் சட்டத்தின் விதி 6-இன்படி குற்றமாகும். எனவே, முஷாரஃபுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டதுடன், தண்டனைக்கு முன் முஷாரஃப் இறந்தால், அவரது உடலை மூன்று நாள் தூக்கில் தொங்கவிட வேண்டும் என்ற சிறப்பு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு  பரபரப்பை ஏற்படுத்தியது.

தேசத் துரோக வழக்கில் முஷாரஃபுக்கு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளதை முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), மறைந்த முன்னாள் பிரதமா் பேநசீா் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி வரவேற்றிருந்தது. 

ராணுவ தலைமைத் தளபதியாக, அதிபராக 40 ஆண்டுகளாக சேவையாற்றிய, தேசத்தின் பாதுகாப்புக்காக போரிட்ட முஷாரஃப் ஒருபோதும் நாட்டுக்கு துரோகமிழைத்திருக்க முடியாது. நீதிமன்றம் அவசரகதியில் தீா்ப்பு வழங்கியுள்ளது’ என்று பாகிஸ்தான் ராணுவம் கண்டனம் தெரிவித்திருந்தது. 

முஷாரஃப் மீது சிறப்பு நீதிமன்றம் நடத்திய விசாரணை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும், அவருக்கு சிறப்பு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிா்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அவரது ‘அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக்’ (ஏபிஎம்எல்) கட்சி தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், சிறப்பு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி லாகூர் உயர்நீதிமன்றத்தில் முஷாரஃப் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய, நீதிபதிகள் சையத் மஜஹர் அலி அக்பர் நக்வி, முகமது அமீர் பட்டி மற்றும் சவுத்ரி மசூத் ஜஹாங்கிர் ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட அமர்வு, முஷாரஃப்பிற்கு எதிராக சிறப்பு நீதிமன்றம் அமைப்பது "அரசியலமைப்பிற்கு விரோதமானது" என்று ஒருமனதாக அறிவித்த நீதிபதிகள், முஷாரஃப்புக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com