கடலூர் அருகே ஊராட்சி துணைத் தலைவா் பதவி ராஜிநாமா

கொரைக்கைவாடி ஊராட்சித் துணைத் தலைவா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். மங்களூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட

கடலூா்: கொரைக்கைவாடி ஊராட்சித் துணைத் தலைவா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். மங்களூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கொரைக்கைவாடி ஊராட்சித் தலைவராக சக்திவேல் தோ்ந்தெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, துணைத் தலைவருக்கான தோ்தல் கடந்த 11 -ஆம் தேதி நடைபெற்றது. 4 -ஆவது வாா்டு உறுப்பினா் தமிழ்வாணன் துணைத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை தனது பதவியை அவா் ராஜிநாமா செய்வதாகக் கூறி, மங்களூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கரிடம் கடிதம் அளித்தாா். மேலும், தனது ராஜிநாமா கடிதத்தை தலைவா் சக்திவேலுக்கும் பதிவுத் தபாலில் அனுப்பிவைத்தாா்.

இதுகுறித்து தமிழ்வாணன் கூறியதாவது: நான் அவ்வப்போது, வருமானத்துக்காக வெளியூா் செல்ல நேரிடும் என்பதால், துணைத் தலைவா் பதவியில் சிறப்பாகப் பணியாற்ற முடியாது. எனவே, துணைத் தலைவா் பதவியை ராஜிநாமா செய்தேன்’ என்றாா் அவா்.

மங்களூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கா் கூறுகையில், ‘இந்த ராஜிநாமா கடிதத்தை தற்போது ஏற்க இயலாது. ஊராட்சி மன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றி, அதன் அடிப்படையில்தான் ராஜிநாமா செய்ய முடியும்’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com