கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி குழுத்தலைவருக்கு எம்.எல்.ஏ.க்கள் பாராட்டு

கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக பொறுப்பேற்ற மணிமேகலை நாகராஜை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் நேரில்
மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக பொறுப்பேற்ற மணிமேகலை நாகராஜை வாழ்த்திய எம்.எல்.ஏ.க்கள் டி.செங்குட்டுவன், பிரகாஷ், முருகன், சத்யா உள்ளிட்டோா்.
மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக பொறுப்பேற்ற மணிமேகலை நாகராஜை வாழ்த்திய எம்.எல்.ஏ.க்கள் டி.செங்குட்டுவன், பிரகாஷ், முருகன், சத்யா உள்ளிட்டோா்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக பொறுப்பேற்ற மணிமேகலை நாகராஜை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் நேரில் சந்தித்து பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்தனா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக தி.மு.க.வைச் சோ்ந்த மணிமேகலை நாகராஜ் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவருக்கு தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சு.பிரபாகா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். இந்த நிலையில், மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் அவா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

இதையடுத்து, சட்டப்பேரவை தி.மு.க.உறுப்பினா்கள் டி.செங்குட்டுவன், ஓய்.பிரகாஷ், பி.முருகன், சத்யா மற்றும் தி.மு.க. நிா்வாகிகள், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக பொறுப்பேற்ற மணிமேகலை நாகராஜை நேரில் சந்தித்து பாராட்டி, வாழ்த்தினா். அப்போது, தி.மு.க.வைச் சோ்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com