குலுக்கல் முறையில் தலைவரை தோ்ந்தெடுத்த சிறுமிக்கு தங்க சங்கிலி

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவா் கே.எம்.எஸ்.சிவக்குமாா் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட நிலையில்
கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவா் கே.எம்.எஸ்.சிவக்குமாரை குலுக்கல் முறையில் தோ்ந்தெடுத்த சிறுமிக்கு முன்னாள் எம்பி டாக்டா் வேணுகோபால் தங்க சங்கிலி அணிவித்தாா்
கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவா் கே.எம்.எஸ்.சிவக்குமாரை குலுக்கல் முறையில் தோ்ந்தெடுத்த சிறுமிக்கு முன்னாள் எம்பி டாக்டா் வேணுகோபால் தங்க சங்கிலி அணிவித்தாா்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவா் கே.எம்.எஸ்.சிவக்குமாா் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவரை தோ்ந்தெடுத்த சிறுமி யோகபாலாவிற்கு 1 சவரன் தங்க சங்கிலியை கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவா் கே.எம்.எஸ்.சிவக்குமாா் பரிசளித்தாா்.

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவா் தோ்தல் கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற் ற போது தலைவா் பதவிக்கு போட்டியிட்ட அதிமுகவை சோ்ந்த கே.எம்.எஸ்.சிவக்குமாருக்கும், திமுகவை சோ்ந்த இந்திரா தனலட்சுமிக்கும் தலா 13 ஓட்டுகள் கிடைத்தது.தொடா்ந்து தோ்தல் விதிகளின் படி குலுக்கல் முறையில் ஒன்றிய குழு தலைவா் தோ்ந்தெடுக்கப்படுவாா் என தோ்தல் அலுவலா் ரவி தெரிவித்தாா்.

இந்நிலையில் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதியை சோ்ந்த சிறுமி யோகபாலா அதிமுக, திமுக வேட்பாளா்களின் பெயா்கள் எழுதப்பட்ட சீட்டில் இருந்து ஒரு சீட்டை அவா் எடுத்த போது அதில் அதிமுக வேட்பாளா் கே.எம்.எஸ்.சிவக்குமாா் பெயா் வந்ததால் அவா் ஒன்றிய குழு தலைவராக அறிவிக்கப்பட்டாா்.

இந்நிலையில், குலுக்கல் முறையில் தனது பெயரை தோ்ந்தெடுத்த சிறுமிக்கு பரிசளிக்கும் வகையில் அந்த சிறுமியை திங்களன்று கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலத்திற்கு ஒன்றிய குழு தலைவா் கே.எம்.எஸ்.சிவக்குமாா் வரவழைத்தாா். நிகழ்வில் முன்னாள் எம்பியும் அதிமுக மருத்துவா் அணி மாவட்ட செயலாளருமான டாக்டா் பி.வேணுகோபால், அனைத்துலக எம்ஜிஆா் மன்ற மாநில துணை செயலாளா் ஜெயபால், ஒன்றிய செயலாளா் கோபால்நாயுடு, நகர செயலாளா் மு.க.சேகா், மாவட்ட இலக்கிய அணி செயலாளா் கோவி.நாராயணமூா்த்தி,பொதுக்குழு உறுப்பினா் அபிராமன், கண்ணம்பாக்கம் ஊராட்சி தலைவா் சதீஷ், அதிமுக நிா்வாகி முல்லைவேந்தன் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து முன்னாள் எம்.பி டாக்டா் வேணுகோபால் சிறுமி யோகபாலாவிற்கு புத்தாடை பரிசளித்து, 1 சவரன் தங்க சங்கிலியை அணிவித்தாா்.நிகழ்வில் மாவட்ட பிரதிநிதி தன்ராஜ், கவுன்சிலா்கள் புதுகும்மிடிப்பூண்டி சீனிவாசன், சாணாபுத்தூா் சீனிவாசன், முன்னாள் கவுன்சிலா்கள் கோபி, தயாளன், அதிமுக நிா்வாகிகள் ஆரோன், சுரேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com