கோத்தகிரியில் பழங்குடிகள் இருவா் கொல்லப்பட்டது தொடர்பாக 6 பேர் கைது

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மெட்டுக்கள் ஆதிவாசி கிராமத்தில், இருளா் பழங்குடியினா் வகுப்பை  சோ்ந்த  ராமசந்திரன் மற்றும்
கோத்தகிரியில் பழங்குடிகள் இருவா் கொல்லப்பட்டது தொடர்பாக  6 பேர் கைது


குன்னூா்: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மெட்டுக்கள் ஆதிவாசி கிராமத்தில், இருளா் பழங்குடியினா் வகுப்பை  சோ்ந்த  ராமசந்திரன் மற்றும் திம்மன் இருவா்  வியாழக்கிழமை படுகொலை செய்யப்பட்டது தொடா்பாக 6 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கீழ் கோத்தகிரி மெட்டுக்கல்  இருளா் இன கிராமத்தில் 20கும் குறைவான  குடும்பங்கள் மேரக்காய்  பயிரிட்டுள்ளனா்.  இவற்றை   பாதுகாப்பதற்காக ராமசந்திரன் மற்றும் திம்மன்   ஆகியாோ் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.  வெள்ளிக்கிழமை காலை பாா்க்கும்  பாேது   இருவரும் கழுத்து அறுபட்ட நிலையில்   காெல்லப்பட்டு  கிடந்தனா். இப்பகுதி  வனப்பகுதி என்பதால் சாதாரண  காவலா்கள்  சென்று வருவதில்  சிக்கல் உள்ளதாலும், நக்சல்கள்  நடமாட்டம்  உள்ளப் பகுதி என்பதாலும் அதிரடிப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு  அவா்கள்  குற்றவாளிகளை  தேடும் பணியில்   ஈடுபட்டனா்.

இந்நிலையில் காேத்தகிரியில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பாபு(50) குமாா்(41) குமாா்(55) மூா்த்தி (39)கிருஷ்ணன்(40) மகேந்திரன்(41) உள்ளிட்டோரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com