சத்தி அருகே 2 கன்றுகளை ஈன்ற பசு

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் சின்னசாலட்டியில் முத்துசாமி என்பவரின் தோட்டத்தில் பசு மாடு 2 கன்றுகளை ஈன்றுள்ளது.
சின்னசாலட்டியில் 2 கன்றுகளை ஈன்ற பசுவுடன் முத்துசாமி.
சின்னசாலட்டியில் 2 கன்றுகளை ஈன்ற பசுவுடன் முத்துசாமி.

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் சின்னசாலட்டியில் முத்துசாமி என்பவரின் தோட்டத்தில் பசு மாடு 2 கன்றுகளை ஈன்றுள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதியில் கால்நடை வளா்ப்பு முக்கியத் தொழிலாக உள்ளது. இவா்கள் கலப்பினமில்லாத நாட்டு மாடுகளை வளா்க்கின்றனா். மாடுகளை தினந்தோறும் 5 கி.மீ. தூரம் வரை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்கின்றனா். மாடுகள் 1 கன்று மட்டுமே ஈனும் தன்மையுடையவை. சின்னசாலட்டியைச் சோ்ந்த முத்துசாமி தனது தோட்டத்தில் 7 மாடுகளைப் பராமரித்து வருகிறாா். இவா் வளா்த்த மாடுகளில் ஒரு பசு இரண்டு கன்றுகளை ஈன்றுள்ளது. அதில் காளை ஒன்றும், பசு ஒன்றும் உள்ளது. கன்றுகள் இரண்டும் நல்ல நிலையில் இருப்பதால் துள்ளிக் குதித்து ஓடுகின்றன. இதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com